டெல்லி:ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், அம்மாநிலத்தின் பொன்விழா ஆண்டிற்கு வருமாறு டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். கரோனா காலம் என்பதால், பொன்விழா ஆண்டு விழாவில் பிரதமரை காணொலிஅழைப்பின் மூலம் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தற்குப் பின் ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது, 'ஹிமாச்சலப் பிரதேசம் உருவாகி வரும் 2021, ஜனவரி 25ஆம் தேதியுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுதொடர்பான விழாவில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்' என்றார்.
இந்த அழைப்புவிடுக்கும் நிகழ்வில் ஜெய்ராம் தாக்கூருடன், அவரது தலைமை தனிச்செயலர் ஆர்.என்.பட்டாவும் உடனிருந்தார்.