தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயலில் இறங்கி விவசாயிகளிடம் பயிரை பெற்ற ஹேமமாலினி - மோடி

லக்னோ: மதுரா தொகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கியிருக்கும் நடிகை ஹேமமாலினி, வயலில் இறங்கி விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்த கோதுமை பயிரை தன் இரு கரங்களால் பெற்று கொண்டார்.

பாஜக

By

Published : Apr 1, 2019, 12:50 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருபவர் நடிகை ஹேமமாலினி. 2014ஆம் ஆண்டு பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹேமமாலினி, இந்த முறையும் அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக மார்ச் 25ஆம் தேதி மதுரா தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நேற்று மதுரா தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஹேமமாலினி, அங்குள்ள வயல் பகுதிக்கு சென்றார். பின்னர், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்த கோதுமை பயிரை தன் இரு கரங்களால் பெற்றுக்கொண்டார்.

இதன்பின்னர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசிய ஹேமமாலினி, தான் மதுரா தொகுதிக்கு நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளதால் மக்கள் தன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும், எதிர்காலத்தில் தொகுதிக்கு இன்னும் பல நலத்திட்டங்கள் செய்வதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு முன்னால் பதவியில் இருந்தவர்கள் மதுரா தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை எனவும் கூறினார்.

இதனிடையே உள்ளூர்வாசி ஒருவர் ஹேமமாலினி தங்களது தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஹேமமாலினி எப்போதெல்லாம் மதுராவிற்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் ஓய்வு விடுதிக்கு சென்று விடுவார். மக்கள் வெயிலில் காத்திருப்பது தெரிந்தும் அவர் இவ்வாறு செயல்படுவார்.

தொகுதிக்காக அவர் இதுவரை ஒன்றும் செய்தது இல்லை. எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. புனித தலமான இந்த இடத்தில் சரியான கழிவறை வசதிகூட இல்லை. இதையெல்லாம் பார்த்துவிட்டு எப்படி அவருக்கு வாக்களிக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details