இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய வங்கக் கடல் மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
அதனால், வடகிழக்கு மாநிலங்களான ஒடிசா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது.