தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19 தொடர்பான விளக்கங்கள் ட்விட்டரில் - மத்திய சுகாதாரத்துறை

By

Published : Apr 20, 2020, 7:18 PM IST

டெல்லி: கோவிட்-19 தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை @CovidIndiaSeva என்ற ட்விட்டர் பக்கத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Harsh
Harsh

இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பின் ஒரு பகுதியாக ட்விட்டர் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திலிருந்தே தெரிந்துகொள்ளும் விதமாக மத்திய அரசு இந்த ட்விட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசுகையில், இந்தியா கரோனவுக்கு எதிராக பேராடி வருகிறது. இந்த சூழலில் எந்தவொரு குடிமகனும் கரோனா தொடர்பான ஐயத்துடன் இருக்ககூடாது என்ற நோக்கில் மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழு சார்பில் @CovidIndiaSeva ட்விட்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் 24 மணிநேர சேவையின் மூலம் மக்கள் நேரடி தகவல்களை உடனுக்குடன் பெறலாம். நாடு முடங்கிக்கிடக்கும் இந்த வேளையில் மக்கள் இருக்குமிடத்திலேயே தங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே அரசின் தலையாய நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊடகவியலாளர்கள் 30 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details