தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2020, 12:46 PM IST

ETV Bharat / bharat

காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சைந்தால் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காவல் நிலையத்தில் தற்கொலை செய்த தலைமைக் காவலர்
காவல் நிலையத்தில் தற்கொலை செய்த தலைமைக் காவலர்

ராஜஸ்தான் மாநிலம் தாசா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கிரிராஜ் என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவர், காவல் நிலையத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த காவலர் ஒருவர், மற்ற காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் கிரிராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து ஏதேனும் குறிப்புகள் கிடைக்கிறதா என காவல் நிலைத்தில் ஆய்வுசெய்தும் ஏதும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'தற்கொலைக்கு காரணம் மனைவிதான்...' - வைரலாகும் காவலரின் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details