தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மரக்கன்று நட்டால்தான் 2ஜி வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்

டெல்லி: நீதிமன்ற உத்தரவுப்படி மரக்கன்றுகளை நடும்வரை 2ஜி வழக்கை விசாரிக்கப்போவதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆ.ராசா- கனிமொழி

By

Published : Mar 26, 2019, 4:34 PM IST

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை 2018 மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகித் உஸ்மான் பல்வா (Shahid Usman Balwa) உள்ளிட்ட மூன்று பேர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமலிருந்தனர். பலமுறை நினைவுபடுத்தியும் அவர்கள் பதிலளிக்காததையடுத்து மூவரும் தலா 1,500 மரக்கன்றுகளை டெல்லியில் நட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நட்டு அதனை புகைப்படம் எடுப்பதோடு மழைக்காலம் வரை பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க கோரியபோது மரக்கன்று நடும் பணி முடிவும் வரை 2ஜி வழக்கை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details