தமிழ்நாடு

tamil nadu

ஹத்ராஸ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

By

Published : Oct 15, 2020, 3:21 AM IST

லக்னோ: ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை பெறுவதற்கு சிபிஐ அலுவலர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றனர்.

Hathras victim
Hathras victim

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற அம்மாநில அரசு பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற அலுவலர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த சிபிஐ அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பூல்காரி கிராமத்திற்குச் சென்ற சிபிஐ அலுவலர்கள், பாதிக்கப்பட்ட பெண் தகனம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர், பெண்ணின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் உத்தரப் பிரதேச காவல் துறையிடமிருந்து சிபிஐ அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஹத்ராஸ் விவகாரம்: 15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details