தமிழ்நாடு

tamil nadu

மத்திய அமைச்சர் சமஸ்கிருதத்தில் பதவியேற்பு

By

Published : Jun 17, 2019, 1:55 PM IST

Updated : Jun 17, 2019, 4:23 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மக்களவை உறுப்பினராக சமஸ்கிருத மொழியில் பதவியேற்றுக் கொண்டார்.

harshvardhan

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜிதேந்திர சிங்

இதனைத் தொடர்ந்து இன்றும், நாளையும் தேர்தலில் வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். அதன் ஒரு பகுதியாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சமஸ்கிருத மொழியில் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

நிதின் கட்காரி

அதேபோல் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டோக்ரி மொழியில் மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.

மேலும்,மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஹர்சிம்ரத் கவுர் ஆகியோரும் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்.

Last Updated : Jun 17, 2019, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details