ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, மத்திய அரசால் நீக்கப்பட்டதையடுத்து அம்மாநிலத்திற்குச் செல்ல முக்கிய தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சூழலில் காஷ்மீர் மாநிலத்தின் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ள மற்ற அரசியல் தலைவர்களைப் பார்க்கச் சென்ற குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.