சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பல நாடுகளை அசையவிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் இதுவரை 199 பேர் உயிரிழந்தும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று குஜராத் மாநிலத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.