குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி தேவனா டேவ், சிறுவயதிலிருந்தே தனது தலைமுடியை வெட்டாமல் மிக நிளமாக வளர்த்துவந்துள்ளார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது முடியை இழந்து வருந்துவதைக் கண்ட தேவனா, தனது முடியை அவர்களுக்கு நன்கொடையாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதனால், தான் சிறு வயதிலிருந்தே ஆசையாக வளர்த்த 30 அங்குல நீள முடியை நன்கொடையாக அளித்துள்ளார். இதன்மூலம் குஜராத்தில் உள்ள மற்ற பெண்களும் முடியை நன்கொடை வழங்க முதற்படியை தேவனா எடுத்து வைத்துள்ளார் என்றால் மிகையில்லை.