தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 18, 2020, 11:39 PM IST

ETV Bharat / bharat

இந்திய தொழிற்துறையில் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் - விரைவில் ஆய்வு

டெல்லி: தொழிற்சாலைகளில் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, மத்திய அரசு விரைவில் ஆராய உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

nirmala sitharaman
nirmala sitharaman

சீனா மட்டுமின்றி உலகை அச்சுறுத்தி வரும் 'கோவிட்-19' வைரஸின் தாக்கம், இந்திய தொழிற்சாலைகளில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து, தொழிற்துறை பிரதிநிதிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ' கோவிட்-19 வைரசால் இந்திய தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து, நாளை பல்வேறு துறை செயலர்களிடம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும். கோவிட்-19 வைரஸ் எதிரொலியால், இதுவரை இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை.

இந்த வைரஸின் பாதிப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் விளைவை ஏற்படுத்துமா என்பதைத் தற்போது கணிக்க முடியாது. வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் உள்ளது என்றார்.

இதையும் பார்க்க: 650 இந்தியர்களை மீட்ட 'ஆபரேஷன் வூஹான்' - விவரிக்கும் மருத்துவர் புலின் குப்தா

ABOUT THE AUTHOR

...view details