தமிழ்நாடு

tamil nadu

ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்க வேண்டி அரசு ஊழியர்கள் மறியல்

புதுச்சேரி: மத்திய அரசு புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளனத்தினர் மறியல் ஊர்வலம் நடத்தினர்.

By

Published : Jan 21, 2021, 6:14 PM IST

Published : Jan 21, 2021, 6:14 PM IST

புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளனத்தினர் ஊர்வலம் மறியல்
புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளனத்தினர் ஊர்வலம் மறியல்

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுச்சேரி அண்ணா சிலை முன்பு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் அங்கு திரண்டனர்.

சங்கத்தலைவர் பிரேமதாசன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு அண்ணா சிலை, நேரு வீதி வழியாக மிஷின் வீதி வந்தடைந்தனர். அங்கு அவர்களை பெரியகடை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த தேவையான நீதியை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகள் உடனே தீர்க்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவை கேட்போம் - முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details