தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் உதவிப்பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்காக வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளின்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், குறைந்தபட்சம் 75 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கு, ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவதுடன், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றிக்க வேண்டும் என்றும், அல்லது தகுதித் தேர்வுகளில் முதல் 20 இடம் பெற்றிக்க வேண்டும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.