டெல்லியில் கடந்த ஞாயிறன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71.86 ரூபாய்க்கு விற்றது. தற்போது மத்திய அரசு 72.46 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஏழை மக்களை மத்திய அரசு ஏழையாக கருதவில்லை: ப.சிதம்பரம் - பெட்ரோல் விலை உயர்வு
டெல்லி: ஏழை, எளிய மக்களை மத்திய அரசு ஏழையாக கருதவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
![ஏழை மக்களை மத்திய அரசு ஏழையாக கருதவில்லை: ப.சிதம்பரம் Govt is poor needs more taxes: Chidambaram business news Chidambaram ப சிதம்பரம் பெட்ரோல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:07-chidambaram-0806newsroom-1591632904-738.jpeg)
p.chidambaram
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்,," ஏழையான அரசுக்கு அதிக வரி தேவைப்படுகிறது. ஏழையான எண்ணெய் நிறுவனங்களுக்கு நல்ல விலை தேவைப்படுகிறது. ஆனால் ஏழை, எளிய மக்களை அரசு ஏழையாக கருதவில்லை. தற்போது உயர்த்தப்பட்ட விலை எண்ணெய் நிறுவனங்களுக்கே பயனளிக்கும்” என பதிவிட்டுள்ளார்.