தமிழ்நாடு

tamil nadu

மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

By

Published : Oct 18, 2020, 7:21 AM IST

டெல்லி: மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம், 2021ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Home Secretary Ajay Kumar Bhalla
மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா

மத்திய உள்துறை செயலராக தற்போது இருந்து வரும் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், பல்லாவின் பதவிக்காலத்தை 2021 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை நீட்டித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவிலிருந்து ஐஏஎஸ் அலுவலராக தேர்ச்சி பெற்ற அஜய் குமார் பல்லா, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் இந்த ஆண்டு ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் செக் இன் செய்ய ரூ.100 வசூல் - இண்டிகோ நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details