நாட்டின் முன்னணி பொதுத்துறை விமானபோக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்க அமைச்சரவை முடிவெடுத்தது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 27ஆம் தேதி முதல் விருப்பமுள்ளவர்கள் இந்நிறுவனத்தை ஏலமெடுக்கலாம் என அறிவித்தது. ஏலத்திற்கான காலக்கெடுவாக மார்ச் 17ஆம் தேதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது, ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.