புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தைப்புதுக்குப்பம் பகுதியில் அருள் என்பவர் ஐந்து சகோதரர்களுடன் வசித்துவருகிறார். இவர்கள் தங்களது இடத்தில் வீடுகளைக் கட்டியுள்ளனர். புதியதாக இன்னொரு வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பாமக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருள்முருகன், திமுக மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் செந்தில்குமார், அரசியல் பிரமுகர்கள் சிலர் போலி பத்திரம் தயாரித்து அவர்களின் இடங்களில் சொந்தம் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.