புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தாமதத்தால், அரசுக்கு கடந்த ஒரு வாரத்தில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, "பிரதமரின் அறிவிப்பால் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. மின்சாரம் தனியார் மயமாக்குவதை புதுச்சேரி அரசு கடுமையாக எதிர்க்கிறது.
மத்திய அரசு கரோனா நிதி வழங்குவதில் அரசியல் செய்யக்கூடாது. ஒரு வார கால தாமதத்திற்கு பின்னரே கிரண்பேடி, மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இதனால் மாநில அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.