தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 11, 2019, 3:20 PM IST

ETV Bharat / bharat

'அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் தோழமையோடு பழக வேண்டும்' - முதலமைச்சர்

புதுச்சேரி: அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் தோழமையோடு பழக வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

puducherry-cm-narayanasamy

பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத் துறை, மத்திய வீட்டுவசதி-நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் கருத்தரங்கில் பல்வேறு அரசுத் துறை, உள்ளாட்சி அமைப்பினர், பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் தொடக்க விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் அரசு செயலர் சங்கர் மிஸ்ரா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், புதுச்சேரியில் பொதுமக்களை அரசு அலுவலர்கள் அலைக்கழிப்பது தொடர்கிறது என்றும் இதுபோன்ற செயல்களை செய்யக் கூடாது என்றும் ஏற்கனவே கூட்டம் நடத்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு அலுவலர்கள் பொதுமக்களுடன் நட்போடு பழக வேண்டும்; தோழமையுடன் இருக்க வேண்டும் என்றார்.

பொதுமக்களுக்கு அரசு ஏராளமான நலத் திட்டங்களை செய்துவருகிறது என்று கூறிய முதலமைச்சர், புதுச்சேரி 11 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். வளர்ச்சி அடைந்து வரும் புதுச்சேரிக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய மறுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், மத்திய அரசு எதிர்மறையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக சாடினார்.

இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் புதிய முறைகளை கடைப்பிடித்து பொறியாளர்கள் கட்டடங்களை கட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான தொழில்களை மத்திய அரசு ஒழித்துவிட்டதாகவும், பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என்றார்.

பேரிடர் மேலாண்மை கருத்தரங்கில் நாராயணசாமி பேச்சு

இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பேசிக்கொண்டிருந்ததால் அவர் மேடையிலேயே கண்டித்தார். தொடர்ந்து மேடையிலிருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை தாங்கள் வந்து உரையாற்றலாம் என்று கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details