தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருது  - மத்திய அரசு அறிவிப்பு - Sardar Patel National Unity Award

டெல்லி: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

AWARD

By

Published : Sep 26, 2019, 12:41 PM IST

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு உதவியவர்களுக்கு மிக உயர்ந்த தேசிய விருது வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் எனவும்; பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருது தொடங்கப்படுவதற்கான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை விருதில் பதக்கம் ஒன்றும் சான்றிதழும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு தினம், அதாவது சர்தார் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்படும். இந்த விருதுடன் பணப் பரிசுகள் இணைக்கப்படாது. ஒரு ஆண்டுக்கு 3 விருதுகளுக்கு மேல் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை விருது

இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் போது குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். நாட்டின் அனைத்து குடிமக்களும் இந்த விருது பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். மிக அரிதான முக்கியச் சூழல்கள் தவிர, மற்ற நேரங்களில் இந்த விருது இறப்புக்குப் பின் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இந்தியாவைச் சேர்ந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசு அமைச்சகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களை பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details