கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களின் பயண தூரத்தைச் சுருக்கும் வண்ணம் உத்தரகண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலேக் என்ற சீன எல்லைப் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார்.
இந்நிலையில், லிப்புலேக் பகுதி தங்கள் எல்லைக்கு உட்பட்டது என்றும், இதுபோன்ற ஊடுருவல் வேலையில் இந்தியா ஈடுபடுவதை நிறுத்துக்கொள்ளுமாறும் அண்டை நாடான நேபாள அரசு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக, இந்தியா-நேபாளத்துக்கு இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
இதனிடையே, கலபானி, லிப்புலேக் பகுதிகள் நேபாள எல்லைக்கோட்டுக்கு உள்ளே இருப்பது போன்ற வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் ஷர்மா ஒலி, "லிம்பியாதுரா, கலபானி, லிப்புலேக் பிரச்னையை நான் முடி மறைக்க விரும்பவில்லை. அது குறித்து தீர்வு காணப்படும். இந்தியாவுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியை மீட்டெடுப்போம்" என உறுதியளித்துள்ளார்.
ஆனால், சர்ச்சைக்குரிய இந்தப் பகுதிகள் உண்மையில் இந்திய எல்லைக்கு உட்பட்டதே.
இந்தியா-சீனா இடையே 1962ஆம் ஆண்டு கைழுயெத்தான ஒப்பந்தத்தில், இப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலம், பிதோராக் மாவட்டத்தில் உள்ள தார்சூலா வட்டாட்சிக்கு உட்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.