தேசிய குடிமக்கள் பதிவேடு கோரும் முக்கிய ஆவணங்களை மீண்டும் விண்ணப்பித்து பெறுவதற்கு மத்திய அரசு மக்களுக்கு உதவுமா என திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் நித்தியானந்தா ராய், "2020ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின்போது ஆவணங்கள் எதுவும் கேட்கப்படாது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை" என்றார்.