மேற்குவங்க மாநிலம் ராம்புராத் பகுதியைச் சேர்ந்த பெண் திரிஷா காத்துன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலியால் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து ராம்புராத் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திரிஷாவின் வயிற்றில், ஏதோ உலோக பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவுசெய்தனர். டாக்டர் சித்தார்த் பிஸ்வாஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தனர்.