உலகெங்கிலும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இரண்டு கோடியே 80 லட்சத்து 14 ஆயிரத்து 827க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்பது லட்சத்து ஏழு ஆயிரத்து 304 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இரண்டு கோடியே 91 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இந்த கரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவரை 65 லட்சத்து 49 ஆயிரத்து 475 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 239 பேர் உயிரிழந்துள்ளனர்.