ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட ராஜஸ்தான் முதலமைச்சர்! - ராஜஸ்தானில் மழை

ஜெய்ப்பூர்: கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது, இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்.

Gehlot
author img

By

Published : Sep 16, 2019, 11:34 PM IST

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கோடா, ஜல்வார், புண்டி, தோல்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், சாலைகள் முற்றிலும் சேதமாகியுள்ளன. தாழ்வான பகுதியில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்த்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவத்தினர் தனி குழுவாக பிரிந்து மீட்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் உள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால் கோடா, ஜல்வாரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை மோசமாகவுள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத்திடம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து அலுவலர்களை ஆய்வு செய்ய அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளார் அசோக் கெலாட்.

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர்

இதற்கிடையில் பீகார், அஸ்ஸாம் மாநிலத்தில் நேர்ந்த அளவு வெள்ள அபாய எச்சரிக்கை இல்லையென்றும், மாநிலத்தில் சில இடங்கள் முற்றிலும் தண்ணீரால் மூழ்கியுள்ளது என்றும் அரசு சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அரசு சார்பாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் வீடு இழந்தோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details