தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2020, 6:49 AM IST

ETV Bharat / bharat

கயா விஷ்ணுபாதம் கோயில்!

விஷ்ணு பாதம். பெயரிலே தெளிவு கிடைக்கிறதா? இதுதான் கோயிலின் பெயர். இங்குதான் விஷ்ணுவின் பாத தடயங்கள் அமைந்துள்ளன. பிகார் மாநிலம் கயாவில் அமைந்துள்ள இக்கோயில், உலகிலேயே கடவுளின் கால் தடத்தை வழிபடும் ஒரே வழிபாட்டு தலமாக அறியப்படுகின்றது.

Vishnupad Temple Pkg பிகார் விஷ்ணு பாதம் கயா சூரன் விஷ்ணு பாத் ராமர், சீதா பால்கு நதிக்கரை 50 kg gold urn and flag on top of temple Gaya Vishnupad temp footprints of God Vishnu விஷ்ணுவின் பாதத் தடயங்கள் தங்க கொடிமரம் மண்ணுக்குள் ஓடும் நதி
Vishnupad Temple Pkg பிகார் விஷ்ணு பாதம் கயா சூரன் விஷ்ணு பாத் ராமர், சீதா பால்கு நதிக்கரை 50 kg gold urn and flag on top of temple Gaya Vishnupad temp footprints of God Vishnu விஷ்ணுவின் பாதத் தடயங்கள் தங்க கொடிமரம் மண்ணுக்குள் ஓடும் நதி

இக்கோயில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. கோயிலின் உச்சியில் 50 கிலோ தங்கக் கலசங்கள் மற்றும் 50 கிலோ தங்கக் கொடி அமைந்துள்ளது. கருவறையில் 50 கிலோ வெள்ளி குடையின் கீழ் விஷ்ணுவின் பாதத் தடம் உள்ளது. இது தவிர, கோயில் கருவறை முக்கோண வடிவத்தில் உள்ளது. அதன் கிழக்கு வாசல் வெள்ளியால் ஆனது. இங்குள்ள விஷ்ணுவின் பாதத்தின் நீளம் சுமார் 40 சென்டிமீட்டர் ஆகும். கோயிலின் இந்த கால்தடங்கள் சிவப்பு சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் விஷ்ணுவின் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் உள்ளிட்டவைகளும் உள்ளன.

100 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் உச்சியில் கறுப்பு கற்கள் வைக்கப்பட்டுள்ளன. கசோடி என்று அழைக்கப்பெறும் இக்கற்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க பயன்படுத்தப்படுபவை ஆகும். இந்தக் கோயிலில் மற்றுமொரு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இறந்த ஆன்மாக்களுக்கு பிண்ட தானம் செய்யும் சடங்குகள் நடைபெறுகின்றன.

அந்தச் சமயங்களில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள், பல்வேறு காலக்கட்டங்களில் மரணித்த தங்களின் உறவினர்களுக்கு பிண்ட தானம் செய்வார்கள். அதன் பின்னர் அவர்கள் கோயிலிலுள்ள விஷ்ணுவின் பாதத்தை வணங்குவார்கள்.

அவ்வாறு செய்யும்போது அவர்களின் பாவங்கள் அழிந்து இரட்சிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் உள்ள மண்டபங்களில் 44 தூண்கள் உள்ளன. கோயிலிலுள்ள 48 தான பீடங்களில், 19 பீடங்கள் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளன. இக்கோயில் தர்மசீலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு கயாசூரா என்ற அரக்கனின் பெயரில் கயா என்று பெயரிடப்பட்டது. விஷ்ணு கயாசுரனை இந்த பூமியில் அழுத்தி கொன்றார்.

ஆகவே, இங்கு முன்னோர்களுக்கு பிண்ட தானம் அளிப்பது ஆத்ம திருப்தியை அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்த பித்ரு பக்ஷா நேரம் நவராத்திரிக்கு முன்னதாக வரும் மஹாளய அமாவாசையிலிருந்து தொடங்குகிறது. அப்போது தானியங்கள், எள், நீர், பால், நெய், தேன், தூபம் மற்றும் விளக்கு ஆகியவை கொண்டு பூஜிக்கப்படும்.

பிகார் விஷ்ணுபாதம் கோயில்!

மேலும் கயாவில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட கடவுளர்கள் மட்டுமின்றி எம தர்ம ராஜாவும் வாசம் செய்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். விஷ்ணுவே இங்கே பித்ரதெய்வமாக அமர்ந்திருக்கிறார். இதுமட்டுமின்றி ராமர் தனது மனைவி சீதா தேவியுடன் இங்கு வழிபாடு நடத்தி தானம் கொடுத்துள்ளார். இந்தக் கோயிலில் தானியங்கள், பழங்கள், வெல்லம், வாழைப்பழம், தயிர் என பல வழிகளில் நீங்கள் இங்கு தானம் செய்யலாம். பூகோளம் குறித்தும் குறிப்புகள் உள்ளன.

கயாவில் விசித்திரங்கள் நிறைந்த பால்கு நதியும் உள்ளது. தாய் சீதாவின் சாபத்தின் காரணமாக, அது பூமியின் உள்ளே இருந்து நீர் பாய்கிறது. அதனால்தான் இது இன்டர்-சலிலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நதியின் விளக்கம் வாயு புராணத்தில் காணப்படுகிறது. விஷ்ணுபாதம் கோயில், பால்கு ஆற்றங்கரை மற்றும் அக்ஷயவத் பலிபீடங்களில் பித்ருபக்ஷத்தின் போது பிண்ட தானம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, இன்றும் மக்கள் தங்கள் முன்னோர்களின் வழிபாட்டிற்காக பிண்ட தானம் வழங்க இங்கு வருகிறார்கள்.

இதையும் படிங்க:கங்கை தோன்றும் முன்னே உருவான குளம்!

ABOUT THE AUTHOR

...view details