'அரசியல் என்பது சாத்தியமாக அடையக்கூடிய இலக்குகளை செய்துகாட்டுவது' என்றார் மாமன்னரான பிஸ்மார்க். இயற்பியலைவிட அரசியல் கடினமானது என்றார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
காந்தியின் வருகைக்கு முன் அரசியல் என்பது வெற்றிக்கான போர்க்களம் என்றே பார்க்கப்பட்டது. காந்தி தனது வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், குடும்பம் ஆகிய அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகினார். காந்தியைப் பொறுத்துவரை அனைத்திலும் நேர்மை அடிப்படையான அம்சம் என்ற கருத்தை முன்வைத்தார்.
காந்தியின் வாழ்க்கையானது அவர் வாழும் காலகட்டத்திலேயே பலரையும் வியக்க வைத்துள்ளது. காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை ஜோசப் கே. டோக்கே என்பவர் 1909ஆம் ஆண்டே எழுதி வெளியிட்டார். அதேபோல் ரோமெய்ன் ரோலாந்த் என்ற பிரெஞ்சு நாடக ஆசிரியர் 'காந்தி என்ற உலகத்து குடிமகன்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். எரிக் ஹெச். எரிக்சன் என்ற உளவியல் நிபுணர் காந்தியின் அகிம்சை சத்தியாகிரகப் போராட்டம் என்ற புதிய பாதை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.