இந்திய - சீன ராணுவம் லாடாக் எல்லைப் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதி எனக் கருதப்படும் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (LAC) பகுதிகளில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரகாண்டில் உள்ள சமோலி பகுதியில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.