சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ஏற்கெனவே மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் பல விமான நிலையங்களில் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்த மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அட்டாரி, கர்த்தர்பூர், அகர்தலா போன்ற துறைமுகங்களிலும் முழு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.