தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எரிபொருள்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்!

புனே: இயற்கை எரிவாயுக்களின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. புவி வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு உலகின் வல்லரசு நாடுகள் அனைத்தும் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவருகின்றனர்.

By

Published : Dec 23, 2019, 11:58 AM IST

plastic free nation
plastic free nation

இதனைக் கருத்தில்கொண்டு புனே மாநகராட்சி, பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற எரிபொருளை உருவாக்க புனே மாநகராட்சி பல ஆலைகளை கட்டியுள்ளது, அவற்றில் சில செயல்படவும் தொடங்கிவிட்டன.

தனியார் நிறுவனங்களுடன் இனைந்து புனே நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை தயாரிக்கின்றது. இந்த முறையில் மிகுதியாகும் கழிவுகளை கொண்டு சாலைகளும் அமைக்கப்படுகின்றன. ஜெதுரி, நாராயன்பேட் என்று புனேவில் இரு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு நகராட்சியிலிருந்து சேகரிக்கப்பட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த முடிகிறது.

எரிபொருள்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்!

இம்முறையில் தயாரிக்கப்படும் எரிபொருளை அடுப்புகள், ஜெனரேட்டர்களுக்கு பயன்படுத்தமுடியும். 6 லிட்டர் எரிபொருளை உருவாக்க சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படுகிறது. இது போன்ற சிறிய ஆலைகளை அமைப்பதன் மூலம் ஒரு பகுதியிலிருந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தலாம். அதிகரித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிக்க 'பிளாஸ்டிக் எரிபொருள் ஆலைகள்' ஓர் சிறந்த தீர்வாக இருக்கும்.

இதையும் படிங்க: மாஸ் காட்டும் பிளாஸ்டிக் வீடு!

ABOUT THE AUTHOR

...view details