தமிழ்நாடு

tamil nadu

தீர்ப்பை கேட்டு பலூன் பறக்கவிட்ட ஜாதவ் நண்பர்கள்!

By

Published : Jul 17, 2019, 10:15 PM IST

Updated : Jul 18, 2019, 12:31 PM IST

மும்பை: குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அவரது நண்பர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குல்பூஷன்

ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து உளவு பார்த்ததாக இந்திய கப்பல் படை வீரர் குல்பூஷன் ஜாதவிற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினரும், நண்பர்களும் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

பிராத்தனையில் குல்பூஷன் குடும்பத்தினர்

பின்னர் இன்று மாலை வழங்கிய தீர்ப்பில், குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தும், தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் கூறியது.

மகிழ்ச்சியில் குல்பூஷன் ஜாதவ் நண்பர்கள்

இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் குல்பூஷன் ஜாதவின் நண்பர்களை பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Last Updated : Jul 18, 2019, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details