தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆட்டோ ஓட்டுநரை கொன்ற நண்பர் காவல் துறைக்கு அஞ்சி தற்கொலைக்கு முயற்சி - Puducherry state news

புதுச்சேரி: மது குடிக்கும்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆட்டோ ஓட்டுநரை குத்திக் கொன்ற நண்பர் காவல் துறையினருக்குப் பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆட்டோ டிரைவரை குத்திக் கொன்ற நண்பர் போலீசுக்கு பயந்து தற்கொலை
ஆட்டோ டிரைவரை குத்திக் கொன்ற நண்பர் போலீசுக்கு பயந்து தற்கொலை

By

Published : Oct 17, 2020, 2:27 PM IST

புதுச்சேரியில் வில்லியனூர் அடுத்த உறுவையாறுபேட் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் (35). குடிப்பழக்கம் காரணமாக இவர் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்துவந்தார்.

இவரது தாயார் தினமும் உணவு வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு உணவு வைக்க வரும்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக தாயார் மங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பார்த்தபோது வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர் அவரது சடலம் உடற்கூறு ஆய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவர் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் கொலையாளியைத் தேடிவந்தனர். குறிப்பாக வெங்கடேசன் கொலை நடந்த அதே நாளில் அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர் பிரபு என்பவர் அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் வாய்த்தகராறில் வெங்கடேசனை கொலைசெய்ததை ஒப்புக் கொண்டார். தற்போது அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details