இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இது நேரடியாகப் புவி ஈர்ப்பை எதிர்த்துச் செல்லாமல், புவி வட்ட சுற்றுப் பாதையிலேயே வலம்வந்த பின்னர் நிலவுக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை நான்காவது முறையாக நேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் சரியாக 3.27 மணிக்கு அதிகரிக்கப்பட்டது. இதேபோல ஐந்தாவது, இறுதிகட்ட சுற்று வட்டப்பாதை அதிகரிப்பு வரும் ஆகஸ்ட் 6 மதியம் 2.30 - 3.30 மணிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது.