உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 1,395 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
தொற்றுநோய் பரவலில் இரண்டாம் கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கும் ராஜஸ்தானில் 12 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக முன்னெடுத்துவருகிறது.
ராஜஸ்தானில் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அம்மாநில அரசு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.
இதன் ஒரு பகுதியாக, சமூக இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான குல்சார் இன மக்கள் வருகைபுரியும் புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் வழிபாடுசெய்ய தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.