தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் பனிச்சரிவுகளில் சிக்கிய பாதுகாப்புபடை வீரர்கள் - தேடும் பணி தீவிரம்! - காஷ்மீர் பனிச்சரிவுகளில் சிக்கிய நான்கு பாதுகாப்புபடை வீரர்கள்

ஸ்ரீநகர்: வட காஷ்மீரில் நடந்த இரு வேறு பனிப்பொழிவுகளில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Kashmir avalanche
காஷ்மீர் பனிச்சரிவு

By

Published : Dec 4, 2019, 12:55 PM IST

Updated : Dec 4, 2019, 1:54 PM IST

நேற்று வட காஷ்மீர் பகுதியிலுள்ள குப்வாரா மாவட்டத்தின் டங்தார் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரு பாதுகாப்புப் படைவீரர்கள் சிக்கிக்கொண்டனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் செவ்வாய்கிழமை மாலை வரை நடைபெற்றது. ஆனால், பின்னர் மோசமான வானிலை காரணமாக தேடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இன்று காலை முதல் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அதேபோல, பண்டிபோரா மாவட்டத்தின் குரேஸ் செக்டர் அருகேவுள்ள தாவர் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சிரிவில் இரு பாதுகாப்புப்டை வீரர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் சமீப காலங்களாக ஏற்படும் பனிச்சிவுகளில் பாதுகாப்புபடை வீரர்கள் சிக்கிக்கொள்வது தொடர்கதையாகிவருகிறது.

இதையும் படிங்க: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்

Last Updated : Dec 4, 2019, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details