ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பா விமான நிலையத்தின் அருகே செம்மரங்களை ஏற்றி வந்த ஸ்கார்ப்பியோ கார் மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதியது.
இந்த விபத்தில் செம்மரங்களை ஏற்றி வந்த ஸ்கார்ப்பியோ கார் தீப்பற்றி எரிந்தது. அந்தக் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணித்த 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.