தமிழ்நாடு

tamil nadu

சாலை விபத்து - எடாவாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

லக்னோ: எடாவா மாவட்டம் ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் டிரக்கும் காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

By

Published : Mar 12, 2020, 7:38 PM IST

Published : Mar 12, 2020, 7:38 PM IST

Four members of family killed in road accident in Etawah
Four members of family killed in road accident in Etawah

இதுகுறித்து மாவட்ட சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர், நேற்றிரவு சவ்பியா காவல் நிலையத்துக்குட்பட்ட நாக்லா பாய் கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. ஸ்ரீகாந்த் மைத்ரி (56), கவிதா மைத்ரி (45), அர்ஜித் விஷ்வாஸ் (45), ஆனான்யா மைத்ரி (30) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், குர்கான் செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கார் டிரைவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details