புதுடெல்லி: 2020 ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இராணுவ பதற்றம் மற்றும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள அனைத்து ஆலோசனை வழிமுறைகளின் தோல்வி, இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆகியவற்றுக்கிடையே வியாழக்கிழமை மாலை மாஸ்கோவில் நடந்த இந்தியா, சீனா இடையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆசியாவின் இருபெரும் அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் அதிகரித்துவரும் ஆயுத மோதலுக்கான வாய்ப்புகளை குறைப்பது மட்டுமன்றி வெளிப்படையான உலகளாவிய தாக்கங்களைக் ஏற்படுத்தும், அதிகரித்துவரும் போர் மூளும் சூழலையும் தவிர்க்கும்.
இந்தப் பின்னணியில், வியாழக்கிழமை மாலை கூட்டத்திற்குப் பிறகு மாஸ்கோவிலிருந்து வெளிவந்த கூட்டு அறிக்கையும் அதற்கு முந்தைய செயல்முறையும், தார்மீக நோக்கங்களின் தெளிவான அறிவிப்பைத் தவிர வேறு சில நோக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பேச்சுவார்த்தைகளை அதிகரித்தல்
இப்போது இவை அனைத்தும் உயர்மட்ட அரசியல் தலைவர்களின் பொறுப்பில் இருக்கிறது. மோடி- ஜின்பிங் வழிமுறையைத் தவிர, மற்ற எல்லா வழிமுறைகளும் முயற்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, அவை தோல்வியும் அடைந்தன என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஆகஸ்ட் 20 அன்று ஈடிவி பாரத் கூறியிருந்தது.
உண்மையில், ஒரு வகையில் கடந்த காலத்தின் காலனித்துவ அடிப்படையிலான இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைகளின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ராணுவ அல்லது ராஜதந்திர தலையீடுகள் ஆகியவை எதுவும் செய்ய முடியாது. இரு நாடுகளின் மிக உயர்ந்த அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே நீண்டகால பிரச்னையைத் தீர்க்க தேவையான வழிமுறைகளும் அதிகாரமும் உள்ளது.
உண்மையான கட்டுப்பாட்டு கோடு பற்றிய தற்போதைய விவகாரங்கள் 50களின் பிற்பகுதியில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, சீன பிரதமர் சூ என் லாய் ஆகியோரின் முயற்சிகள் தோல்வியடைந்ததன் காரணமாக விளைந்தவை. அந்த முயற்சிகள் தோல்வியுற்றதால், 1962ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
அதனால்தான் இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை, இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று கூட்டு அறிக்கையின் முதல் அம்சம் கூறுகிறது. வூஹான் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் நடந்த மாநாட்டின் நோக்கத்தின் தொடர்ச்சியாக, வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உச்சிமாநாடு அளவிலான பேச்சுவார்த்தைகளை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
ரஷ்யாவின் எழுச்சி
இரண்டாவதாக, ரஷ்யாவின் ஒரு ராஜதந்திர ரீதியிலான சமரசம் செய்து வைக்கும் கூற்று மிகவும் தெளிவாக உள்ளது. உலக நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மத்தியில் ரஷ்யாவின் மதிப்பு இதன் மூலம் அதிகரிக்கும்..