கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் ஸ்ரீ குரு ராகவேந்திர கூட்டுறவு வங்கியின் தலைமை நிர்வாக அலுவலராக வாசுதேவ மாயா பணியாற்றினார். இவர், தலைமை அலுவலராக பணியாற்றிவந்தபோது ஸ்ரீ குரு ராகவேந்திர கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் நிதி மோசடிகள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைடுத்து, ஜூன் 18ஆம் தேதியன்று பெங்களூருவில் உள்ள அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) சோதனை நடத்தியது. இவர் கடந்த இருநாள்களாக எங்கிருந்தார் என தெரியாத நிலையில், பெங்களூருவில் அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.