தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாம்பை வைத்து நடனம்: 5 பேர் மீது வழக்கு! - பாம்பை வைத்து நடனமாடிய 5 பேர் மீது வழக்கு

காந்தி நகர்: கர்பா நிகழ்ச்சியின் போது பாம்பை வைத்து நடனமாடிய பெண்கள் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

garba dance

By

Published : Oct 12, 2019, 7:17 PM IST

குஜராத் மாநிலத்தில் தசரா பண்டிகை வெகு சிறப்பாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்படும். இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக கர்பா நிகழ்ச்சி கொண்டாடுவர். இதில் வண்ணமயமான உடைகள் அணிந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் நடனமாடுவர்.

இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் பெண்கள் மூன்று பேர் பாம்பை வைத்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் மீது வனத்துறை துணை பாதுகாவலர் சுனில் பெர்வால் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அவரது புகாரையடுத்து நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தவர், பாம்பை பிடித்துக் கொடுத்தவர், மூன்று பெண்கள் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயது சிறுமி ஒருவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க: 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா' - பின்னிப் பிணைந்த பாம்புகள்..!

ABOUT THE AUTHOR

...view details