ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு குடோனில் 132 அட்டை பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, குற்றவாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து, சிகரெட் பெட்டிகள் அனைத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.