குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் லிம்ப்டி-அகமதாபாத் நெடுஞ்சாலையில் கார் ஒன்று லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர் ஒருவர் தெரிவிக்கையில், “வெள்ளிக்கிழமை (மார்ச்3) இரவு, காந்திநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார், லாரி மீது மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.