தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடியை வழங்கிய மத்திய அரசு! - மாநிலங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கிய மத்திய அரசு

டெல்லி: நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ.6,195 கோடியை வழங்கியுள்ளது.

Finance Minister
Finance Minister

By

Published : May 12, 2020, 1:58 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் மத்திய அரசு, தங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.

இந்நிலையில், திங்கள்கிழமை ரூ. 6,195 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானிய நிலுவைத் தொகையை 14 மாநிலங்களுக்கு நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "மே 11, 2020ஆம் ஆண்டு 15ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இது கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராட அவர்களுக்கு உதவும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதில், கேரள அரசுக்கு ரூ.1,276.91 கோடியும் பஞ்சாப் அரசுக்கு ரூ.638 கோடியும் மேற்கு வங்க அரசுக்கு ரூ.417.75 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 3ஆம் தேதி முதல்கட்டமாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானிய நிலுவைத் தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

ABOUT THE AUTHOR

...view details