விசாகப்பட்டினம், கோபாலப்பட்டினம் ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலி வினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த எரிவாயு கசிவில் 10 பேர் உயிரிழந்தும், 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, ஆலையில் இருந்து கசிந்த ஸ்டைரீன் எனும் வாயுவால்தான், மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு கண்கள், தோல் மற்றும் மூக்கில் எரிச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.