தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2021, 3:21 PM IST

ETV Bharat / bharat

வீடு திரும்பும் செளரவ் கங்குலி - மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள்

பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

செளரவ் கங்குலி
செளரவ் கங்குலி

கொல்கத்தா:பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி (43) கடந்த இரண்டாம் தேதி நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்த குழாயினை விரிவுப்படுத்துவற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.

அவரை பரிசோதித்த இருதய நோய் சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் நேற்றுத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இன்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பாக திரண்டனர்.

இந்நிலையில், மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் இருக்க செளரவ் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர் நாளை (ஜன.7) வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செளரவ் கங்குலி இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவார் - மருத்துவர்கள் தகவல்

ABOUT THE AUTHOR

...view details