மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் விமன் நகர்ப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் ராணுவ புலனாய்வுத் துறையினர், புனே காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, 44 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய கரன்சி கள்ள நோட்டுகளையும், நான்கு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க கரன்சி கள்ள நோட்டுகளையும் பறிமுதல்செய்தனர்.
இது தொடர்பாக ஷேக் ஆலிம் குலாப் கான் (ராணுவ வீரர்), சுனில் சர்தா, ரித்தேஷ் ரத்னக்கர், துஃபைல் அகமது முகமது இஷாக் கான், அப்துல் கானி கான், அப்துல் ரஹ்மான் அப்துல் கானி கான் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.