ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பேராசிரியரான டாக்டர் பிரையன் ப்ரிமேக் தலைமையிலான பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 120 நிமிடங்களுக்கும் குறைவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு 300 நிமிடங்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள் ஆறு மாதங்களுக்குள் மனச்சோர்வை அடைவதற்கு 2.8 மடங்கு வாய்ப்புகள் அதிகம். சமூக வலைதளங்களுக்கும் மனச்சோர்வுக்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும்.
இது குறித்து ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பேராசிரியரான டாக்டர் பிரையன் ப்ரிமேக், "மனச்சோர்வுக்கும் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கும் தொடர்பு உள்ளது என்பதை நாம் மற்ற பெரிய ஆய்வுகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் மனச்சோர்வு அதிகரிக்கிறதா அல்லது மனச்சோர்வு அதிகரிப்பதால் சமூக வலைதளங்களை ஒருவர் அதிகம் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து நம்மால் தெளிவாகப் தெரிந்துகொள்ள முடியவில்லை.