தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமாவில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - Pulwama

ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிப்போரா அருகே பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு படைவீரர் உயிரிழந்தார்.

jammu

By

Published : May 16, 2019, 7:54 AM IST

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட தலிப்போரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படை அலுவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அவர்களின் வருகையை அறிந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், இச்சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு படைவீரர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த இரண்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புல்வாமா தாக்குதல் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் அப்பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details