தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெற்கு காஷ்மீரில் இரண்டு பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை! - ஷோபியன் மாவட்டம் டைரூ பகுதியில் மோதல்

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், பிரிவினைவாதிகளிடையே ஏற்பட்ட மோதலில் பிரிவினைவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Encounter breaks out in South Kashmir
தெற்கு காஷ்மீரில் இரண்டு பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை!

By

Published : Apr 17, 2020, 1:27 PM IST

Updated : Apr 29, 2020, 2:21 PM IST

தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டம் டைரூ பகுதியில் பிரிவினைவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்தத் திடீர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தேடுதல் நடவடிக்கையின்போது பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தெற்கு காஷ்மீரில் இரண்டு பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை!

இந்த மோதலில் பிரிவினைவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் முழு விவரங்களைப் பாதுகாப்புப் படையினர் சேகரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க :கரோனா தடுப்பிற்காக பெல் நிறுவனத்துடன் கை கோர்த்த எய்ம்ஸ் நிறுவனம்

Last Updated : Apr 29, 2020, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details